ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏபிவிபி குண்டர்களால் தமிழ்நாடு மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய மாணவர் கழகம் பெரியார் படத்துடன் பேரணி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், தமிழ்நாடு மாணவர்கள் பெரியார் படத்தை தாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைத்திருந்தார்கள் என்பதற்காக சங்கிகள் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் குண்டர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கினார்கள். பல்கலைக் கழகத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். பெரியார், அம்பேக்கர், மார்க்ஸ் படங்களை இழிவுப்படுத்தியதனைக் கண்டித்து பிப்ரவரி 25ம் தேதி அகில இந்திய மாணவர் கழகம் (அய்சா) சார்பாக மாணவர்கள் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், அசபுல்லாகான், பகத் சிங், பூலே, சாவித்திரிபாய், அயோத்திதாசர், தோழர் சந்திரசேகர் போன்றோரின் படங்களுடன் பேரணி நடத்தினார்கள்.

புரட்சிகர இளைஞர் கழகத்தின் அகில இந்திய மாநாடு

புரட்சிகர இளைஞர் கழகத்தின் 7வது அகில இந்திய மாநாடு செப்டம்பர் 10-11 தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்தின் நீலாம்பர் பீதாம்பர் நகர் என்று அமைப்பாளர்களால் பெயரிடப்பட்ட, மேதினி நகரில் தொடங்கியது. 1857 கிளர்ச்சியின் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் மாநாட்டு இடம் நீலாம்பர் பீதாம்பர் நகர் என மறுபெயரிடப்பட்டிருந்தது. மாநாட்டின் பொது அமர்வை தோழர் திபங்கர் தொடங்கி வைத்தார்.

‘பில்கிஸ் பானுவோடு நாம்' பில்கிஸ் பானுவுக்கு நீதி கேட்டு போராட்டம்

பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும் என்றும் அவருக்கு அநீதி இழைத்த, ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதைக் கண்டித்தும் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!
   
கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு!

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு!

முற்போக்கு திராவிடத்தின் புதிய கல்விக்கொள்கை!!
     மதிவாணன்

தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.