இந்திப் பிரதேசத்தின் ஒரே கட்சி என்ற பிஜேபியின் கொக்கரிப்புக்குப் பதிலடி!

மார்ச் 3- பீகார் தலைநகர் பட்னாவில், இந்தியா கூட்டணி நடத்திய, லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி, மக்கள் நம்பிக்கைப் பேரணி நடந்தது. ஐந்து நாட்கள் பொதுக்கூட்டங்களாக நடத்தப்பட்டது. ஆர் ஜே டி தலைவர் தேஜஸ்வி அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அடுத்த ஐந்து நாட்கள் அது வாகனப் பயணமாக மாற்றப்பட்டு, மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரப்புரையின் நிறைவாக மாபெரும் மார்ச் 3 அன்று பட்னாவில் பேரணி நடந்தது. மாநிலம் முழுவதும் சிபிஐஎம்எல் கட்சித் தோழர்களும் மக்களும் கொடிகளோடும் பதாகைகளோடும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தலையங்கம்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கால வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா கூட்டணியைச் சார்ந்த கட்சிகள் தவிர, இதர கட்சிகளில் எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னமும் ஆடு புலி ஆட்டமாகவே இருக்கிறது. நாட்டின் பிரதம அமைச்சரே மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை செய்து கூட்டாளிகளை வலைவீசி பிடிக்க முயற்சிக்கிறார். ஒபிஎஸ் உள்ளிட்டோர் நாங்கள் பிஜேபியிடம் தொகுதி கேட்டிருக்கிறோம் என சொல்லிக்கொண்டு கைகட்டி நின்று கொண்டிருக்கின்றனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கான விதிகள் அறிவிப்பு: 2024 தேர்தலுக்கான மிகப்பெரிய அரசியல் சதி!

2024 தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கிற இந்நேரத்தில், 2019 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட, அநீதி, பாரபட்சம், பிளவு அரசியலை மட்டுமே உத்தரவாதப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) விதிகளை உருவாக்கி உடனடியாக அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதானது, மிகப்பெரிய அரசியல் சதிக்கான சமிக்ஞையாகும்.

தோழர் மனோஜ் மன்சில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல்; புரட்சிகர ஜனநாயகத்தின் போர்க்குரல்!

தோழர் மனோஜ் மன்சில், பீகாரிலுள்ள போஜ்பூரின் அகியோன் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களிடமும் முற்போக்கு, ஜனநாயக சமூகத்தின் மத்தியிலும் பெரும் செல்வாக்கு பெற்றவர். அவரும் கட்சித் தோழர்கள் 22 பேரும் 2015இல் அரசியல் ரீதியில் பொய்யாக புனையப்பட்ட (கொலை) வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தோழர் மனோஜ் மன்சில், பீகார் சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆளுநர் உரைக்கு எதிராக ஆளுநர்.

தேசிய கீதத்துக்கு ஆளுநர் அவமரியாதை

பிப் 12 அன்று ஆளுநர் உரையோடு ஆரம்பிக்க வேண்டிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஆளுநர் வெளிநடப்போடு துவங்கியது. தேசிய கீதத்துடன் உரையை முடிப்பதற்குக் கூட அவர் காத்திருக்கவில்லை. சட்டப் பேரவைத் தலைவரால் அவமதிக்கப்பட்டதாக காரணம் கூறி, தேசிய கீதத்துக்காக எழுந்து நின்ற ஆளுநர், அது பாடப் படும் வரை காத்திராமல் வெளியேறி, தேசிய கீதத்தையே அவமதித்து விட்டார்.

ஆளுநர் கோட்சேவுக்கு எதிரானவரா?

தேர்தல் பத்திரத் திட்டம் ஜனநாயக விரோதமானது - உச்ச நீதிமன்றம்

பாஜக அரசாங்கத்தின் தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானதெனக் கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பை இகக(மாலெ) விடுதலை வரவேற்கிறது. தேர்தல் பத்திரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஜனநாயக விரோதமானவையும் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானவையும் ஆகும். அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமான இந்தத் தேர்தல் பத்திர திட்டம் மூலமாக நடைபெற்ற கார்ப்பரேட்டுகளின் நிதியளிப்புகள் குறித்த விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நிதிநிலை அறிக்கை 2024: அரைகுறை உண்மைகள், சூழ்ச்சியான மோசடிகள், திரிப்பு வேலைகள் அடிப்படையிலான அதீத தம்பட்டம்

2024 இடைக்கால நிதிநிலை அறிக்கை தேர்தல் பரப்புரையில் ஒரு பகுதியாகவே உள்ளது. பொறுக்கி எடுத்த தரவுகள், அரைகுறை உண்மைகள், திரிப்பு வேலைகளையும் நம்பியிருக்கிறது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து, தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

அரசாங்கத்தின் பல முதன்மைத் திட்டங்களுக்கு உண்மையில், திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, ஒதுக்கீடு செய்யமுடியவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

எதிர்நீச்சல்

அயோத்தியாவில் ராமர் கோவில் திறக்கப்படும் ஒரு மத நிகழ்வை, "நாகரீகத்தின் வெற்றி; தேசத்தின் வெற்றி” என்றெல்லாம் தம்பட்டம் அடித்து, பிஜேபி-ஆர்எஸ்எஸ் பரப்புரையை மேலும் வெற்றியடையச் செய்திட, தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளும் ஊதுகுழல் ஊடகங்களும் அரசு எந்திரமும் கரம் கோர்த்து மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கின்றன.

அயோத்தி: ராமரின் பெயரிலான கோவில் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான மோடியின் நினைவுச் சின்னமாக மாறியது

முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி கிடைத்தது. வரலாற்று சிறப்பு வாய்ந்த பாபர் மசூதி சங்கிப் படையினரால் பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வன்முறை மிக்க இந்தச் செயலும் அதன் விளைவாக நூற்றுக் கணக்கான உயிர்கள் பலியான பின்பும் பல இந்தியர் களும் இதனை மசூதிக்கு எதிராக கோயில் பிரச்சினை என்ற கோணத்திலேயே தொடர்ந்து காண்கின்றனர். அண்மைக்காலம் வரை மசூதி இடிப்பை ஒரு குற்ற நடவடிக்கையாகவே உச்ச நீதிமன்றம் கூறியது. சட்டத்தின் ஆட்சியை அருவருக்கத்தக்க வகையில் மீறிய செயலாகும் எனவும் கூறியது.

தமிழ்நாட்டின் செங்கொடிப் போராட்ட மரபை, சமூக நீதி இயக்க மரபை உயர்த்திப் பிடித்து முன்னேறுவோம்!

மேடையில் இருக்கும் தலைவர்களே! தோழர்களே! நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜெய் பீம்! லால் சலாம்!!