2025 அய் பாசிச தாக்குதலுக்கெதிரான பெரும் வெற்றிகளைப் பெறும் ஆண்டாக மாற்றுவோம்!

பாலஸ்தீனர்களுக்கு எதிராக காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல் நடந்து கொண்டிருக்க, 2024 பல நாடுகளில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக இருந்துள்ளது. நமது பிராந்தியத்தில், சிறீலங்கா அதன் வரலாற்றில், முதன்முறையாக ஒரு இடது சாய்வு கொண்ட ஆட்சியைக் கொண்டுவந்துள்ளது. பங்களாதேஷில் ஏற்பட்ட வெகுமக்கள் எழுச்சி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டைவிட்டு ஓடி, இந்தியாவில் தஞ்சமடைய வைத்துள்ளது; ஆனால், இங்கு பிற்போக்கு ஜமாத்-சார்பு சக்திகள் உறுதிப்பட்டிருப்பதால் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படும் வாய்ப்பு நிச்சயமற்றதாக உள்ளது.

அதானியின் லஞ்ச ஊழல்: அமெரிக்காவில் கைது செய்ய பிடி ஆணை! இந்தியாவிலோ நடவடிக்கையே இல்லை!

அதானி குழுமம் பல பில்லியன் டாலர் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையால் கௌதம் அதானி மீதும் அவரது மருமகன் சாகர் அதானி மீதும் கைது பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளனஇது அதானியின் ஊழல் தொழில் நிறுவன பேரரசின் மீது இதுவரை தொடுக்கப்படாத மிகப்பெரிய தாக்குதலாகும்.

ஒரே சமயத்தில் தேர்தல் மசோதா ஜனநாயகம், கூட்டாட்சிமுறையின் அடிப்படை உணர்வையே வேரறுக்கும் செயல்: இகக(மாலெ)

2024, டிசம்பர் 17 அன்று மோடி அரசாங்கம், ஜனநாயக விரோதமானதும், அரசமைப்புச்சட்ட விரோதமானதுமான ஒரேசமயத்தில் தேர்தல் என்பதை குறிவைத்து இரண்டு மசோதாக்களை முன்மொழிந்திருக்கிறது. 129 வது அரசமைப்புச் சட்ட மசோதா, 2024, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2024, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் மனிதஉரிமை அமைப்பின் வளர்ச்சிக் கட்டங்கள்.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) அமைப்பின் மாநில மாநாடு  2024 நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாள்களில் கோவையில் நடைபெற்றது. "தமிழ்நாடு எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சனைகள்" எனும் பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வு  பியூசிஎல் மாநிலத் தலைவர் பேரா. சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது : மாநில இணைச் செயலர் வழ. சேகர் அண்ணாதுரை வரவேற்புரை நிகழ்த்த, மாநிலப் பொதுச் செயலாளர் வழ.  ஜான் வின்சென்ட் மாநாட்டு அறிமுகவுரை ஆற்றினார்.

ஸ்டெர்லைட் வேதாந்தா, மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதிக்க கூடாது !

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் உரிமத்தை, தூத்துக்குடி ஸ்டெர்லைட்  கொலைகார நிறுவனமான வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் ("Hindustan Zinc Limited"), ற்கு, கடந்த நவம்பர் 07 ல், பாஜக ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் தாரை வார்த்துள்ளது.

தேர்தல் வெற்றியுடன் திரும்ப வந்திருக்கும் டிரம்ப் - படிப்பினைகளும் சவால்களும்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவினார். அதனைத் தொடர்ந்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சித்தார். அதுவும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு தற்போது நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று திரும்பவும் ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளார். அதுவும் கடந்த இருபதாண்டுகளில் குடியரசு கட்சி பெற்றிராத வியத்தகு வெற்றியுடன் இதனை அரங்கேற்றியுள்ளார். பரந்த மக்கள் நேரடியாக அளித்த வாக்கின் அடிப்படையிலும் வெற்றிபெற்ற குடியரசு கட்சியின் முதல் அதிபராகவும் அவர் மாறியுள்ளார்.

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

1. பஞ்சமி நிலம் மீட்பு இயக்கத்தில் உங்களது அனுபவம் பற்றி கூறுங்கள்