மார்க்ஸிய கலைச்சொற்கள் , தோழர் எஸ்.வி.ஆருடன் ஓர் நேர்காணல்

[தோழர் எஸ்.வி.ஆருடன் நடந்த மிகநீண்ட உரையாடலின் ஒரு பகுதி மட்டும்]

மார்க்சியம் கற்பது எவ்வளவு அவசியமோ அதேபோல் மார்க்சியத்தை விமர்சிப்பவர்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை நாம் வெல்ல முடியும். அவர்களின் கேள்விகள் மூலமாக நமது மார்க்சியக் கண்ணோட்டத்தை செழுமைப்படுத்த முடியும். 

பாட்டாளி வர்க்கம் எனும் சொல்லாடல்

தொழிலாளர்கள் மீது மோடி தொடுக்கும் பத்தாண்டு காலப் போர்!

மோடியின் பேரழிவுவாத நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலனிலிருந்து தான் என சொல்லப்படுகிறது. தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்காகத்தான் தேர்தல் பத்திரம், விவசாயிகளின் நலனில் இருந்து தான் வேளாண் சட்டங்கள், காஷ்மீர் மக்களின் நலன் காக்கத் தான் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து, வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நலனில் இருந்து தான் புதிய குற்றவியல் சட்டங்கள், பெண்கள் நலனிலிருந்து தான் பொது சிவில் சட்டம், தொழிலாளர்களை பாதுகாக்கத் தான் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் என்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக பெற்ற, அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக பெற்ற மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வருகிறார்கள்.

தேர்தல் பத்திரம்: ஒரு மோசடித் திட்டம்

அண்மைய ஆண்டுகளில் மிகவும் அப்பட்டமான மோசடிகளில் ஒன்று, மோடி அரசாங்கத்தின் தேர்தல் பத்திரத் திட்டமாகும். இத் திட்டம் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இறுதியில் அதனைச் செல்லாது என அறிவித்துள்ளது. இத் தீர்ப்பு, ஜனநாயகத்தில் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்ட நம்பிக்கையூட்டும் நியாயமான தீர்ப்பு என வருங்காலத்தில் பேசப்படும். மிகவும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இன்றைய இந்தியாவில் கார்ப்பரேட் அதிகாரத்திற்கு எதிரான சமமற்ற போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

துரோகங்களின் சுற்றுப்பயணம்!

2014ல் மோடி பிரதமரானதிலிருந்து இதுவரை 24 முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளாரென ஒரு தகவல் கூறுகிறது. இந்த ஆண்டு, ஜனவரியில் இரண்டுமுறை தமிழ்நாட்டுக்கு வந்த மோடி, பிப்ரவரி-மார்ச் ஒரு வாரத்திற்குள் அய்ந்துமுறை வந்து போய்விட்டார். பல்லடம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை என சூறாவளி பயணம் நடத்தியுள்ளார்.

ஆளுநர் உரைக்கு எதிராக ஆளுநர்.

தேசிய கீதத்துக்கு ஆளுநர் அவமரியாதை

பிப் 12 அன்று ஆளுநர் உரையோடு ஆரம்பிக்க வேண்டிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஆளுநர் வெளிநடப்போடு துவங்கியது. தேசிய கீதத்துடன் உரையை முடிப்பதற்குக் கூட அவர் காத்திருக்கவில்லை. சட்டப் பேரவைத் தலைவரால் அவமதிக்கப்பட்டதாக காரணம் கூறி, தேசிய கீதத்துக்காக எழுந்து நின்ற ஆளுநர், அது பாடப் படும் வரை காத்திராமல் வெளியேறி, தேசிய கீதத்தையே அவமதித்து விட்டார்.

ஆளுநர் கோட்சேவுக்கு எதிரானவரா?

அயோத்தி ராமனைத் தூக்கி வந்த அரசியல் ராமன் !

ஜனவரி 2ல் திருச்சி வந்து சென்ற பிரதமர் மோடி மீண்டும் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்து சென்றார். அமைச்சர் உதயநிதியின் அழைப்பை ஏற்று ஜனவரி 19 அன்று சென்னை வந்த மோடி, விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) கோலாகல நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தபின்னர், தமிழ்நாட்டில் 3 நாட்கள் தங்கிவிட்டார். ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவர், திருவரங்கம், ராமநாதபுரம், ராமேசுவரம், ராமர்பாதம், அரிச்சல்முனை என பல இடங்களுக்குச் சென்று தில்லி வழியாக 22ந் தேதி அயோத்திக்கு சென்றார்.

அயோத்தி: ராமரின் பெயரிலான கோவில் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான மோடியின் நினைவுச் சின்னமாக மாறியது

முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி கிடைத்தது. வரலாற்று சிறப்பு வாய்ந்த பாபர் மசூதி சங்கிப் படையினரால் பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வன்முறை மிக்க இந்தச் செயலும் அதன் விளைவாக நூற்றுக் கணக்கான உயிர்கள் பலியான பின்பும் பல இந்தியர் களும் இதனை மசூதிக்கு எதிராக கோயில் பிரச்சினை என்ற கோணத்திலேயே தொடர்ந்து காண்கின்றனர். அண்மைக்காலம் வரை மசூதி இடிப்பை ஒரு குற்ற நடவடிக்கையாகவே உச்ச நீதிமன்றம் கூறியது. சட்டத்தின் ஆட்சியை அருவருக்கத்தக்க வகையில் மீறிய செயலாகும் எனவும் கூறியது.