பெண்கள் மீது தொடரும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்;
பெண்கள் புழங்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வேண்டும்!
சென்னை, அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்கொடுமைக்கு, எதிராக, தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய அளவிலும் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பு, சுதந்திரம் தொடர்பான குரல்கள், கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. அரசுக்கு எதிராக உருவாகியுள்ள கோபத்தை எதிர்கொள்ள, பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது.