இரவும் எங்களுக்கு சொந்தம்!

மேற்குவங்கம்கொல்கத்தா மருந்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவரை கூட்டு வன்புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்த பாதகச் செயல் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கஉத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மும்பை மருத்துவமனைகளிலும் பெண் மருத்துவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், படுகொலைக்கும் ஆளாகி வருகின்றனர்தமிழ்நாடு, உத்தரகண்டில் சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள், கேரளத்தில் பெண் திரைக் கலைஞர்கள் மீது பாலியல் கொடுமைகள் என பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளுக்கு நீதி கேட்டுஇரவும் எங்களுக்கு சொந்தம்மீட்டெடுப்போம்என்ற முழக்கத்துடன்அனைத்து பணியிடங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பும் கெளரவமும் உறுதி செய்யப்பட வேண்டும்! நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும், புதுவை அரசுமாநில பெண்கள் ஆணையத்தை உடனே செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில்  27.08.2024 அன்று  புதுச்சேரி வில்லியனூர்  துணைமாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஎம்.மல்லிகா, எம்.மீனாட்சி தலைமை தாங்கினார்கள். அஇமுபெக புதுச்சேரி மாநிலச் செயலாளர் விஜயா,   , ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் முருகன் மற்றும் எஸ்.அருள்குமார், புரட்சிகர இளைஞர் கழக அமைப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.