பழனியில் ஆபத்தான வெடிமருந்து தொழிற்சாலை விவசாயிகள் எதிர்ப்பு இயக்கம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வடக்கு தாதநாயக்கன் பட்டி கிராமத்தில், பழனி வடக்கு மலைத் தொடர் அடிவாரத்தில், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த அமராவாதி வனப்பகுதிக்கு அருகில், 250 ஏக்கர் பரப்பளவில், வருடத்திற்கு 2,191 டன் வெடி பொருட்களுக்கான மூலப்பொருட்களைத் தயாரிக்கும் சுவா எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆலையைத் துவக்க பல்வேறு அரசு முகாமைகள் அனுமதி அளித்துள்ளன. தனியார் கார்ப்பரேட் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதிக்கு மிக அருகில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் மலை, சமணர் குகைகள், வரலாற்றுச் சின்னங்கள், அகழ்வாய்வு தளங்களும் உள்ளன.

குஜராத் இனப்படுகொலை: உண்மை தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருக்கும்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் கொடூர படுகொலை நிகழ்ந்த போது, குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த மோடியின் பாத்திரம் குறித்து பிபிசி (பிரிட்டிஷ் பிராட்கேஸ்ட் கார்ப்பரேஷன்) "இந்தியா: மோடி பற்றிய கேள்வி” என்று இரண்டு பகுதிகளாக தயாரித்திருக்கும் ஆவணப்படத்தின் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று ஒளிபரப்பப் பட்டது. அந்தப் படம் இந்தியாவில் ஒளிபரப்பப் படவில்லை. மோடி அரசாங்கம் இந்தப் படம் சம்பந்தமான ட்விட்டர் பதிவுகள், இணைப்பு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி விடுமாறும் யூ ட்யூப் நிறுவனம் அந்த காணொளிகளை அல்லது காட்சிகளை பதிவேற்றம் செய்வதை நிறுத்திடு மாறும் கேட்டுக் கொண்டது.

2024 தேர்தலில் மோடி அரசைத் தோற்கடிப்போம்!

நவதாராளவாத கொள்கை அமுலாக்கத்தின் விளைவுகள் என்ன, தொழிலாளர் சட்டங்களை ஒழித்ததன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறது மோடி அரசாங்கம். தொழிலாளர் சங்கம் அழைக்கப்படாத தொழிலாளர் அமைச்சர்களின் திருப்பதி மாநாட்டில் நடந்தது அதுதான். தொழிலாளர் சீர்திருத்தங்கள் அமுலாக்கப்பட்ட மாநிலங்களில் தொழில்துறை வளர்ந்து இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறது. ஊதியம் அதிகரித்து இருக்கிறது என்றெல்லாம் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு, தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து தொகுப்புச் சட்டம் உருவாக்கியது சரிதான் என நிறுவப் பார்க்கிறது.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர் நலனை உயர்த்தி பிடித்து ஒன்றாக இணைந்து எதிர்த்துப் போராட வேண்டியது அவசர அவசியமாக உள்ளது.

"ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்" என்ற இந்தக் கருத்தரங்கத் தலைப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும். ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு ஆதாரமான ஊதியத்தில் கை வைக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய தொழிலாளர் மாநாடு என்ற அமைப்பைக் கூட்டவே இல்லை. சமீபத்தில் திருப்பதியில் இந்திய தொழிலாளர் மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எந்த தொழிற்சங்கமும் அழைக்கப் படவில்லை. பதிலாக அவர்கள் எல்லா தொழிலுக்கும் பொதுவான தேசிய தரைமட்டக் கூலி என அறிவித்திருக்கிறார்கள். குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகவும் குறைவான ரூபாய் 176 என்ற சொற்பத்தொகையை கொடுத்தால் போதும் என்கிறார்கள்.

சுடும் எதார்த்தமும் போராட்ட உணர்வும்

'ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு நீதான அனுப்பின உம் பையன'. காலேஜ் படிக்கும் தன் மகன் அப்பார்ட்மெண்ட் செப்டிக் டேங்க் கழுவச் சென்று விஷ வாயு தாக்கி இறந்து விட்டான் என்பதை நம்ப முடியாமல் என் மகனைக் காட்டு, அவனைக் காட்டுங்கள் என்று கதறும் தூய்மைப் பணியாளரான தாயிடம் அரசாங்க ஆஸ்பத்திரியில் அடாவடியாகப் பேசுகிறது போலீஸ். மலக் குழி மரணம். புகார் வாங்கக் கூட மறுக்கும் போலீஸ், கம்ப்ளைண்ட் எதுக்கு? என்ன பண்ணப் போறீங்க? எதுவும் நடக்காது. பேசி முடிச்சா கொஞ்சம் பணமாவது கிடைக்கும் என்கிறது. இன்னொரு பக்கம், மாநகராட்சி அலுவலகம்.

டிசம்பரின் செய்திகள்: நாட்களும் நடப்புகளும் - 2

டிசம்பர் 5: 75 நாட்கள் மர்ம சினிமாவின் இறுதிக்காட்சி சோகமாக முடிந்து போனது. டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா இறந்து விட்டார். அவரது மரணத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள "அம்மாவின் ஆட்சியே" விசாரணை ஆணையம் அமைத்தது! ஆனால் திமுக ஆட்சியிலும் ரகசியம் வெளிவரவில்லை. எம்ஜிஆர் இறந்தபிறகு இரண்டு துண்டுகளான அதிமுகவை வெற்றிகரமாக ஒன்றுபடுத்தி, இறப்பு வரை தனது சுருக்குப்பையில் வைத்திருந்த 'இரும்புப் பெண் மணியால்' அவரது இறப்புக்குப்பிறகு நான்கு துண்டுகளானதை அவரால் 'வானுலகத்திலிருந்து' வேடிக்கை தான் பார்க்கமுடிந்தது!

2023: ஒன்றுபட்ட ஆற்றல்மிக்க பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை நோக்கி

புத்தாண்டின் வருகையானது பொதுவாக புதிய இலக்குகளை அமைத்துக் கொள்வதற்கும் புதிய தீர்மானங்களை வகுத்துக் கொள்வதற்கு மான நேரமாகும். ஆனால் மோடி அரசாங்கத்திற்கோ அது உண்மையில், பழைய வாக்குறுதிகளை குப்பைத் தொட்டியில் போடுவதற்கும் புதிய தொடு எல்லைகளுடன் புதிய கதை யாடலை தொடங்குவதற்குமான வழியாகும்.

வாலாட்டிக் குழையும் ஊடகங்களைத் தொடர்ந்து வாலாட்டிக் குழையும் நீதித்துறையை அரசாங்கம் விரும்புகிறதா?

கடந்த சில நாட்களாக மோடி அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தின் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முறையை, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரென் ரிஜுஜுவும் மாறி மாறி வெளிப்படையாக தாக்கிப்பேசி வருகின்றனர். அதோடு 2015 இன், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை சட்ட விரோதமென தள்ளுபடி செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, "மக்களின் தீர்ப்பை" மதிக்காத செயல் என்று கூறி, குடியரசு துணைத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக, உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது.

டிசம்பரின் செய்திகள்: நாட்களும் நடப்புகளும்!

டிசம்பர், 2022க்கு பிரியாவிடை கொடுக்கும் மாதம். 2023அய் கைகொடுத்து வரவேற்கும் மாதம். டிசம்பருக்குள் நுழைவோம்.

டிசம்பர் 1: "மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னைப் போல அவனப்போல

அச்சம், பொய்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்!

உலகளாவிய கோவிட்19 பெருந்தொற்றின் கொடூரப் பரவல் நிகழ்ந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகும், அதன் இடையூறு மிகுந்த பின்விளைவுக ளிலிருந்து இந்த உலகம் மீண்டு வர வேண்டி யுள்ளது. வேறு எங்கேயும் உள்ளதை விடவும் இந்த பெருந்தொற்று உருவாகிய சீனா, அதன் தீவிரப்பரவலின் பின்னதிர்வுகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டு உள்ளது. மேலும், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது என்னும் பெயரில் நடந்து வரும் அடக்குமுறை அரசின் தலையீடுகளுக்கு எதிரான, மிகப் பரவலான சமூகப் போராட்டங்களையும் கூட கண்டது.