தலையங்கம்

பாஜகவும் மஜதவும் பெண்களின் காவலர்களாம்!!

ஆர்எஸ்எஸ்-பாஜக என்றால் இந்துத்துவ மதவெறியும் கார்ப்பரேட் பணவெறியும் ஒரு புறம் என்றால், மோசடிகள்பொய்கள்பித்தலாட்டங்கள், பாலியல் குற்றங்கள் இன்னொருபுறம்மன்னராட்சி கனவில் இருந்த மோ(மு)டி அரசரின் கனவு பலிக்காமல் போய்விடும் என்ற பயம் வந்தவுடன் வாய்க்கு வந்தபடி வெறுப்பையும் விஷமத்தையும் கக்குகிறார்காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்துப் பெண்களின் தாலி இருக்காது என்று பேசுகிறார். ராகுல் பிரதமராக வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது என்று பிதற்றுகிறார். மணிப்பூரில் இரண்டு பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்தபோது கண்ணையும் காதையும் பொத்திக் கொண்ட இந்திய  நாட்டின் பிரதமர்ஆசிபாவை கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்றவர்களை, அந்தக் கொலைகாரர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் போன பாஜக தலைவர்களை, கண்டிக்காத இந்த நாட்டின் பிரதமர் மோடி இப்போது இந்துப் பெண்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும்  அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாஜக கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்முறைவக்கிரக் கொடூரங்கள் வெளிவந்து ஒட்டு மொத்த இந்தியாவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறதுஇப்போதும் எதுவும் நடக்காததுபோல் மவுனம் காக்கிறார் இந்திய பிரதமர் மோடிகிட்டத்தட்ட 3000 பெண்களை, தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களை வன்கொடுமை செய்திருக்கிறார் பிரஜ்வல் ரேவண்ணா. இதில் பெரும்பான்மையோர் இந்துப் பெண்கள்தான் என்பதை மோடி, ஷா உட்பட யாரும் மறுக்கமுடியாதுபிரஜ்வல் ரேவண்ணா மட்டுமின்றிஅவரது அப்பா எச்.டி. ரேவண்ணாவும் பெண்களை குறிப்பாக தங்கள் வீட்டில் வேலை செய்த பணிப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று புகார் அளிக்கப்பட்டுஇருவர் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஇந்துப் பெண்களுக்காக குரல் கொடுப்பதாகச் சொல்லும் மோடி மட்டுமல்லபெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனோபாஜக அரசின் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சரான ஸ்மிருதி இராணியோபாஜக மகளிர் அமைப்புப் பொறுப்பாளர்களான குஷ்புவோ, வானதி சீனிவாசனோ இன்று வரை வாய் திறக்கவில்லைபிரஜ்வல் ரேவண்ணாவை சத்தமில்லாமல் வெளிநாட்டிற்கு அனுப்பியும் வைத்துள்ளார்கள். ரேவண்ணாவின் லீலைகள் பற்றி முன்னமே தெரிந்திருந்தும் இந்த நாட்டின் பிரதமர் கர்நாடகாவில் ரேவண்ணாவிற்காக அவரின் தோள் மேல் கைபோட்டு வாக்கு சேகரித்தார் என்பதுதான் கொடுமையிலும் கொடுமைஇந்த மோடி அவர்கள்தான்மகள்களைக் காப்போம்’ என்று கண்ணீர் சிந்தி வாக்குகள் கேட்டு வருகிறார். தேவகவுடாவின்  சொந்த ஊரான ஹோலேநரசிபுராவில் அவரது குடும்பத்தினர் பற்றி வாய் திறந்து பேசுவதற்கு அங்குள்ள மக்கள் அஞ்சுகிறார்கள்அந்த அளவுக்கு ரேவண்ணாக்களின் நிலப்பிரபுத்துவ கொடுமைகளும் சாதி வெறி ஆதிக்கமும் இருந்து வருகிறதுஇன்றும் கூட தலித் மக்கள் ரேவண்ணாக்களின் வீட்டிற்குள் செல்லமுடியாது என்கிறார்கள். நிலப்பிரபுத்துவசாதியாதிக்க மனோபாவம் கொண்ட மதச் சார்பற்றஜனதாதளமும்கார்ப்பரேட் ஆதரவு சனாதனவாதிகளும் ஒன்றிணைந்து இருப்பதில் வியப்பேதுமில்லைதான்ஆனால்இவர்கள் பாலியல் குற்றவாளியான ரேவண்ணாவை தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளதாகச் சொல்லிவிட்டு, இப்பிரச்சினை வெளியே வந்ததற்காக எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது பழி போடுகிறார்கள். பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா இது எப்போதோ நடந்தவை எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதாயத்திற்காக இதை தேர்தல் நேரத்தில் வெளியிட்டுள்ளார்கள்  என்று  தன் மகனின் குற்றத்தை நியாயப்படுத்துகிறார். சித்தப்பா முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்தான் இந்த வீடியோக்களை வெளியிட்டுவிட்டார், இதன் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டார் என்கிறார். பாஜகவின் தேவராஜ் கவுடாவும் இதையே சொல்கிறார்இந்த தேவராஜ் கவுடாவிடம்தான் ரேவண்ணாவின் பாலியல் கொடுமைகள் அடங்கிய வீடியோக்களின் பென்டிரைவைக் கொடுத்தேன் என்று ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திக் கூறியிருக்கிறார். பாஜக-மஜத தலைவர்களுக்கு ரேவண்ணா  பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தது தப்பில்லையாம். அது வெளி வந்ததுதான் தப்பாம்இப்படிப்பட்டவர்கள்தான் மீண்டும் அரியணை ஏறி ஆட்சி நடத்தத் துடிக்கிறார்கள்இந்திய மக்கள்பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பாஜகவினருக்கு செல்லும் இடமெல்லாம் செருப்படி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்தில்லுமுல்லுகள் இல்லையெனில் சங்கிகள் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்படுவது உறுதி.