இகக(மாலெ) தஞ்சையில் 24.7.2022ல் நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!! என்ற முழக்கத்துடன் 24.7.2022 அன்று தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, காவேரி திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. தஞ்சை நகரத்திலும் மாநாட்டு மண்டபத்திலும் செங்கொடிகள் செங்கதிரொளியினூடே பறக்க, தோழர்கள் சந்திரகுமார் சந்திரசேகர்-சுப்பு பெயரிடப்பட்ட அரங்கத்தில் மாலை 3.30 மணிக்கு கோவை நிமிர்வு கலைக்குழுவினரின் தப்பாட்டத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. மாநாட்டிற்கு இகை(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் தலைமை தாங்கினார்.

நெல்லையில் பாசிச பாஜக - இந்து முன்னணியால் விசிறி விடப்பட்ட சட்ட விரோத கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி; நீதிக்கான போராட்டம் வென்றது !

சட்டமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவின் வேட்பாளர் செய்த பணப்பட்டுவாடாவை அம்பலப்படுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளரும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவருமான எம்.சுந்தர்ராஜ், இக்க(மாலெ) நெல்லை பாட்டப்பத்து கிளைச் செயலாளர் பேச்சிராஜா மற்றும் சில குடும்பத்தினரையும் காவிக்கும்பல்களின் ஆதரவில் கட்டுப்பாடு என்ற பெயரில் ஊர் விலக்கம் செய்து வைத்ததற்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் இகக(மாலெ) கட்சியால் எடுக்கப்பட்டது.

கல்வி தனியார்மயமும் காவிமயமும் மாணவர்களைக் கொல்லும்!

மீண்டும் ஒரு மாணவியின் மர்ம மரணம். கன்னக்குரிச்சி மாவட்டம் சின்னச்சேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக்குலேசன் என்கிற தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவர் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். மாடியில் இருந்து விழுந்து கிடந்த இடத்தில் இரத்தம் ஏதும் இல்லை. ஆனால், மாணவியின் தலையில் இரத்தம் உறைந்துள்ளது. பள்ளியின் படிக்கட்டுகளில் விடுதிச் சுவர்களில் இரத்தம் காணப்பட்டுள்ளது. மாணவியின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. மாடியில் இருந்து விழுந்தவர் உடலில் எந்த எலும்பு முறிவும் இல்லை.

ஆகஸ்ட் 05, 2022 ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு CPI(ML) RYA - AlSA தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 05, 2022 ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு

CPI(ML)- RYA -AlSA தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறை ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது.

தடை மீறி கண்டன ஆர்ப்பாட்டம். 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது

பாபநாசம் திருமண மஹால்

தமிழக அரசே!

கைது செய்யபட்ட தோழர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்!