தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை: வெற்று ஆரவார அறிவிப்புகள்

தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அதற்கடுத்து தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையும் வெற்று ஆரவாரம்தான் என அம்பலமாகியுள்ளது. முழுமையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பரிசீலனை செய்தால் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாகவே இருக்கிறது.

விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளை மீட்டெடுக்க, பல்வேறு வேளாண் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க, விவசாயிகளின் வாழ்வா சாவா எனப்படும் இயற்கை பேரிடர்கள், பயிர்க் காப்பீடுகள், விவசாய கடன்கள் மற்றும் தள்ளுபடிகள் வரை ஒதுக்கப்பட்ட நிதி மிகமிகக் குறைவானதே !

குஜராத் இனப்படுகொலை: உண்மை தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருக்கும்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் கொடூர படுகொலை நிகழ்ந்த போது, குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த மோடியின் பாத்திரம் குறித்து பிபிசி (பிரிட்டிஷ் பிராட்கேஸ்ட் கார்ப்பரேஷன்) "இந்தியா: மோடி பற்றிய கேள்வி” என்று இரண்டு பகுதிகளாக தயாரித்திருக்கும் ஆவணப்படத்தின் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று ஒளிபரப்பப் பட்டது. அந்தப் படம் இந்தியாவில் ஒளிபரப்பப் படவில்லை. மோடி அரசாங்கம் இந்தப் படம் சம்பந்தமான ட்விட்டர் பதிவுகள், இணைப்பு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி விடுமாறும் யூ ட்யூப் நிறுவனம் அந்த காணொளிகளை அல்லது காட்சிகளை பதிவேற்றம் செய்வதை நிறுத்திடு மாறும் கேட்டுக் கொண்டது.

இமாச்சல், டெல்லி, குஜராத்திலிருந்து வரும் சமிஞ்கைகளும் பாடங்களும்

நிச்சயமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தத்தக்க பாஜகவின் குஜராத் வெற்றியின் அளவு தவிர, குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல், டெல்லியின் நகர்மன்ற தேர்தலின் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு இணங்கவே வெளிவந்துள்ளன. இந்த மூன்று தேர்தல்களிலும் பாஜக தான் ஆட்சியில் இருந்த கட்சியாகும். தற்போது இரண்டில் அது ஆட்சியை இழந்துள்ளது. இந்த அர்த்தத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது எனலாம். ஆனால் வாக்கின் பங்கு (52 சதத்திற்கும் மேல்), இடங்களின் பங்கு (85 சதத்திற்கும் மேல்) ஆகிய இரண்டு அளவுகளின் படி குஜராத்தில் அது பெற்ற வெற்றி அதன் தோல்வி மீது நிழலாக படிந்து அதனை மறைத்து விட்டது.

துன்புறுத்திய பார்ப்பனீயத்தை தூக்கிச்சுமப்பவர்கள்

சூழ்ச்சிமிக்க, கொடூரமான, மாந்தநேயமற்ற அமைப்பான சாதி பல்வேறு இடங்களில் பல்வேறு வழிகளில் பரிணமிக்கிறது. அண்டாமை, தீண்டாமை, காணாமை என்பவை நாடெங்கும் நடக்கும் எல்லோரும் அறிந்த இழி நடவடிக்கைகள். தாழ்த்தப் பட்ட மக்களை அருகே வராதே, நெருங்காதே, உன் நிழல்கூட எங்கள்மீது பட்டுவிடக்கூடாது என்று ஒதுக்கிவைக்கிறார்கள் ஆதிக்கச்சாதியினர். “எதிரே வராதே, எங்கள் தெருவுக்குள் நுழையாதே" என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து காலுக்குள் போட்டு மிதிக்கின்றனர். "நாங்களும் உங்களைத் தொட முடியாது, நீங்களும் எங்களை அணுகக்கூடாது” என்று தீண்டாமையை வாழ்க்கை முறையாக்கி வைத்திருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை அறிக்கையே மனுஸ்மிருதி!

(விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளிட்ட “மனுஸ்மிருதி பெண்கள்-சூத்திரர்களைப் பற்றி என்ன சொல்கிறது? என்ற புத்தகத்திற்கு விசிக நிறுவனர்-தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதிய முன்னுரை)

இந்தியாவை ஆளுவது மனுஸ்மிருதியே!

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இ ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தையும் அதன் உயிர்ப்பையும் கேலிக்கூத்தாக்குகிறது

முற்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தோடு மோடி அரசாங்கம் கொண்டு வந்த 10% ஒதுக்கீட்டை சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வில் பொதிந்துள்ள குறிக்கோளையும் நோக்கத்தையும் தெள்ளத் தெளிவாக மீறியுள்ளது. இந்த தீர்ப்பானது உரிமை பறிக்கப்பட்ட பிரிவினருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை மேலும் இறுக்கிட மட்டுமே செய்துள்ளது. இதைதான் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவி னருக்கான தீர்ப்பில், தலைமை நீதிபதி யு.யு.

தலித்துகள் புத்தமதத்திற்கு மாறுவது கண்டு சங்கிப் படைகள் அஞ்சுவதேன்?

1956, அக்டோபர் 14 அன்று, பாபாசாகேப் அம்பேத்கர் லட்சக்கணக்கானவர்களுடன் புத்தமதத்தை தழுவினார். அந்த ஊர் நாக்பூர், அந்த இடம் தீக்ஷாபூமி(மதம் மாறிய மண்) என்று அழைக்கப்படுகிறது, அந்த இடத்தில், டிசம்பர் 18, 2001 அன்று அப்போதைய ஜனாதிபதி கே.ஆர் நாராயணன் அவர்களால் ஒரு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இப்போது அது, நாக்பூரிலுள்ள ஒரு பாரம்பரிய கலாச்சார மய்யமாக பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. அசோகா விஜய தசமியான இந்த நாள், பேரரசர் அசோகர் கலிங்கப் போரால் ஏற்பட்ட பேரழிவைக்கண்டு மனம் மாறி வன்முறையை துறந்து புத்த மதத்தைத் தழுவியதாக நம்பப்படுகிற நாளை, ஆண்டு தோறும் நினைவுகூரும் நாளாகும்.

இந்தியாவின் நீதித்துறை ஒரு 'நிர்வாக நீதிமன்றமாக' சுருக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்!

செப்டம்பர் 3 ஆம் தேதி, தீஸ்தா செதால்வத் அகமதாபாத்தின் சபர்மதி சிறையில் இருந்து 68 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் பிணையில் விடுதலை ஆனார். 2002 குஜராத் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியதால் அரசியல் ரீதியாக பழிவாங்கும் கைது நடவடிக்கைகளில் ஆர்.பி ஸ்ரீகுமாருடன் கைது செய்யப்பட்ட அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். இவரின் முதன்மை பிணை மனு குஜராத் உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது.

காலனியாதிக்க மற்றும் அடிமைத்தன அடையாளத்திற்கு எதிராக நம் கொடியை உயரத்தில் பறக்கச் செய்வோம்!

செப்டம்பர் 8 அன்று, இந்தியா கேட்டில் புதிய கர்தவ்ய பாதையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ராஜ பாதை (ஆங்கிலத்தில் கிங்ஸ்வே என்பதில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) என்பது அடிமைத் தனத்தின் ஒரு அடையாளமாக இருந்தது என்று கூறினார். அதேபோல், கடந்த வாரம் ஐஎன்எஸ் விக்ராந்த் துவக்க நிகழ்வின் போது மோடியினால் வெளியிடப்பட்ட இந்திய கப்பற்படை கொடியில் ஏற்கனவே இருந்த புனித ஜார்ஜின் சிலுவை அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு புதிய சின்னம் சேர்க்கப்பட்டிருந்தது.

பாசிச வன்முறையிலிருந்து விடுதலை கேட்டு அழுகிறது இந்தியா 75

ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி. இந்த ஆகஸ்ட் 13-15க்கான மோடி அரசாங்கத்தின் அழைப்பு இது. இந்தியா விடுதலை பெற்ற 75வது ஆண்டில், 'விடுதலையின் அமுதப் பெருவிழா' என்று பெரிதும் விளம்பரப்படுத்தப் பட்ட அதிகாரபூர்வ கொண்டாட்டத்தின் உச்சம் இதுவாகத்தான் இருக்கும்.