தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மறைந்த மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலிக் கூட்டம் கோவையில் 22.12.2022 அன்று மாலை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத் தோழர்கள் கொண்டு வந்திருந்த தோழர் என்.கே. நினைவுச் சுடரை, இகை(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கரிடமும் என்.கே.யின் குடும்பத்தினரிடமும் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தோழர் என்.கே.நடராஜன் அவர்களின் திருவுருவப் படத்தை தோழர் திபங்கர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கருத்தியல் கடப்பாடு, அரசியல் தெளிவு, அமைப்பு ஒற்றுமை மற்றும் பலம் ஆகிய மூன்று அம்சங்களைக் கடைப் பிடிக்கிற பெரிய கட்சி, வலுவான கட்சி நமக்குத் தேவை

மாநாட்டு தலைமைக் குழு தோழர்களே!பிரதிநிதி தோழர்களே! பார்வையாளர்களே! 

இரண்டு நாட்களாக மாநாட்டில் வைக்கப் பட்ட நகல் அறிக்கையின் மீது விவாதம் நடத்தி இருக்கிறீர்கள் அதன் பின்பு அறிக்கை அவையால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதை நடை முறையில் அமலாக்க வேண்டும். இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பாசிச எதிர்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியாக இகக(மாலெ)வை வலுப்படுத்திட"மாநாடு உறுதி ஏற்கிறது!

கள்ளக்குரிச்சி 4வது மாவட்ட மாநாடு ஆகஸ்ட் 20, 2022 அன்று கெடிலத்திலுள்ள தோழர் சம்மனசு மேரி அரங்கின் முன் கட்சிக் கொடியை மாநிலச் செயலாளர் என் கே ஏற்றி வைக்க தியாகிகள் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தி தொடங்கியது. தோழர்கள் ஜெயந்தி, கொளஞ்சிநாதன் உள்ளிட்ட தலைமைக்குழு தோழர்கள் மாநாட்டை வழி நடத்தினர்.

250 கட்சி உறுப்பினர்கள், 26 கட்சிக் கிளைகள், 7 உள்ளூர் கமிட்டிகள், 3200 வெகு மக்கள் உறுப்பினர்கள், உறுப்பினர் கட்டணம் முழுவதும் செலுத்தியது உள்ளிட்ட தகுதிகளை சரிபார்த்த மாநிலக் கமிட்டி பார்வையாளர் தோழர் ஜி. தனவேல் மாநாட்டை தொடக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.

பாசிச வன்முறையிலிருந்து விடுதலை கேட்டு அழுகிறது இந்தியா 75

ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி. இந்த ஆகஸ்ட் 13-15க்கான மோடி அரசாங்கத்தின் அழைப்பு இது. இந்தியா விடுதலை பெற்ற 75வது ஆண்டில், 'விடுதலையின் அமுதப் பெருவிழா' என்று பெரிதும் விளம்பரப்படுத்தப் பட்ட அதிகாரபூர்வ கொண்டாட்டத்தின் உச்சம் இதுவாகத்தான் இருக்கும்.

ஆகஸ்ட் தியாகிகளுக்கு வீரவணக்கம்! மோடியை வெளியேற்ற உறுதியேற்போம்!

1942 ஆகஸ்ட் 9ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் அழைப்பு வெளியான வுடன், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத் தின் ஒரு பகுதியான தேவகோட்டை, (இப்போது சிவகங்கை) திருவாடானை, திருவேகம்பத்தூர் ஆகிய இடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கையிலெ டுத்தனர். ஆகஸ்ட் 14ல் இருந்து 17வரை இப்பகுதி களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களில் தேவகோட்டை மீது நீதிமன்றம் கொளுத்தப்பட்டது. அதன் பின் பிரிட்டிஷ் ராணுவம் போராளிகள் துப்பாக்கியால் சுட்டதில் 75 பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

ஏஐசிசிடியு மாநிலக் குழுக் கூட்டம் அழைப்பு

2022 ஆகஸ்டு 14, 15 இரு நாட்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஏஐசிசிடியு மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தோழர்கள் சங்கரபாண்டியன், இரணியப்பன், அந்தோணிமுத்து, பாலசுப்பி ரமணியன், சுசீலா, சுகுந்தன் ஆகியோர் கொண்ட குழு தலைமை ஏற்று நடத்தியது. சமீபத்தில் காலமான ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மகேந்திரன், ஏஐசிசிடியு விசைத்தறி தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மாணிக்கம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் ராம்கிஷன் (ஆகஸ்ட் 17 முதலாம் ஆண்டு நினைவு தினம்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர்களும் தமிழ்நாடும்

இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையடைந்த 75 ஆம் ஆண்டில், அதை அனனவரும் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியாளர்கள் யார் என்றால், விடுதலைக்காகப் போராடியவர்களை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள். ஆங்கிலேயர் களிடம் தங்களுக்குச் சேவை செய்யக் கடன்பட்டுள்ளேன், என்னை சிறையில் இருந்து விடுவித்திடுங்கள் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரின் வாரிசுகள். நாட்டு விடுதலைப் போரின் போது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக, இந்திய நாட்டை மதரீதியாகத் துண்டாடத் துடித்த கோல்வார்க்கரின் வாரிசுகள் சனாதன இந்துமத வெறி கோட்சே வாரிசுகள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை, 2022 ஜூலை 24 அன்று நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ்நாட்டிலும் காவிப் பாசிச கூக்குரல் கள் அதிகரித்து வரும் வேளையில், இதக (மாலெ) அழைப்பை ஏற்று தங்களின் அரிய நேரத்தை ஒதுக்கி இந்த காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள், விசிக, பச்சை தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர்களுக்கு நன்றி யையும் மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திர ளாய் கலந்து கொண்டுள்ள செயல்வீரர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும் மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.