பாஜகவிற்கு தென்னிந்திய நுழைவாயில் மூடப்பட்டது!

கர்நாடகா தேர்தலின் ஆரவாரம் இப்போது அடங்கிவிட்டது. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று உள்ளது. சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் அளித்துள்ள கர்நாடக மக்கள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியையும், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதையும் எதிர்நோக்கியுள்ளனர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், மன்னர்கள் காலச் செங்கோல்! தமிழர் பெருமிதமா, மதப் பண்பாட்டின் மீட்டுருவாக்கமா ?

காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் பிறந்த நாளான மே 28ம் தேதியன்று, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழா தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதும், அதேநாளில் புதிய நாடாளுமன்றம் ஆரவாரமாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் சைவ மடாதிபதிகள் / ஆதீனங்கள், சைவப் பண்டாரங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். 'பழங்குடியினரான குடியரசு தலைவர் விழாவிற்கு அழைக்கப்படவில்லை' என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்சிகளும் விழாவைப் புறக்கணித்தன.

சாராயத்தில் ஏது கள்ளச் சாராயம் நல்ல சாராயம்!

'ஈடில்லா ஆட்சி, இரண்டு ஆண்டே சாட்சி" என்று ஆளும் திமுக சாதனைக் கூட்டங் களை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணமுற் றுள்ளார்கள். பலர் சிகிச்சையில் உள்ளார்கள். திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களில் முக்கியமான ஒன்று பூரண மது விலக்கு. பத்திரிகை நிருபர்கள் திரு. ஸ்டாலின் அவர்களிடம், சாராய ஆலைகள் பல தங்கள் கட்சிக்காரர்களால் நடத்தப்படுகின்றதே! நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆலைகள் மூடப்படுமா என்று கேட்டார்கள்.

திமுகவின் இரண்டாண்டு ஆட்சி

திமுகவின் இரண்டாண்டு ஆட்சியை, "ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டு ஆட்சி" 'ஆண்டது ஈராண்டு ஆளப்போவது நூறாண்டு" என்றும் கொண்டாடப்படுகிறது. திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென்றும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

வரலாற்றில் தடம் பதித்த 11ஆவது கட்சிக் காங்கிரஸ் சொல்லும் செய்தி

இதுதான் இகக(மாலெ) விடுதலையின் 11ஆவது கட்சிக் காங்கிரஸின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியும் அரசியல் முழக்கமும் ஆகும். கட்சி அணிகளுக்கும் அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் நாடெங்கிலுமுள்ள போராடும் மக்களுக்கும் ஒரு மிகத் தெளிவான அழைப்பாகும்.-ஒரு நீண்ட கால புரட்சிகர கண்ணோட்டத்தில் இன்று நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிகவும் அவசரமான அரசியல் பணிகளாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகும்.

வேங்கைவயல் எழுப்பும் கேள்விகள்

வேங்கைவயல் தலித்துகள் குடிக்கும் சமைக்கும் தண்ணீரில் மலம் கலந்த கொடூரச் செயல் வெளி உலகத்துக்கு தெரிய வந்து நான்கு மாதங்களாகி விட்டது. இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. வேங்கைவயலைச் சுற்றி பல இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் உள்ளன. வெளியிலுள்ள வர்கள் வேங்கைவயல் மக்களுடன் கலந்து விடக் கூடாதென்று கவனமாக காவல்துறை சோதனை போட்டுத் தடுக்கிறது. வேங்கைவயல் மக்கள், வெளி உலகத்திலிருந்து துண்டித்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது அரசு செயல்படுத்தும் தீண்டாமை. இது அரசே செய்யும் மனித உரிமை மீறல்.

மதுச்சேரியை மக்கள் புதுச்சேரியாக மாற்றப் போராடுவோம்!

பாஜகவின் பாசிச ஆட்சியில் மாநில ஆளுநர்கள் தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுகளை செயல்பட விடாமல் தொடர் சர்ச்சைகள் ஏற்படுத்துவது அதிகரித்து வரும் சூழலில், பல போராட்டங்களுக்குப் பின்னால், தற்போது தமிழ்நாட்டிலும் தெலுங்கானாவிலும் ஆளுநர்களால் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை உள்ளிட்ட கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கனியாமூர்-வேங்கை வயல் முதல் அம்பை-உடன்குடி வரை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கையை துரிதமாக எடுப்போம்... இந்த அரசைப் பொறுத்தவரை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே ஓர் அவமானச் சின்னம் என்று கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று ஏப்ரல் 12 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தெளிவற்ற, நடைமுறைச் சாத்தியமற்ற தொலைதூர வாக்களிப்புத் திட்டம்

உள்நாட்டில் புலம்பெயர்ந்தோருக்கான தொலை தூர வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு, பிப்ரவரி 27, 2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் இகக (மாலெ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த முன்மொழிவு நடைமுறை சாத்தியமற்றது, முற்றிலும் தெளிவற்றது என்று  கூறியுள்ள இகக(மாலெ), வாக்களிக்கும் குறிக்கோள் மற்றும் நோக்கத்திற்காக உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் பற்றிய எந்தவொரு உறுதியான வரையறையையும் வழங்காமல், இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு முன்மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உருவாக்குவதை நோக்கி அவசரமாக செயல்படு வது குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.