தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ளம் பற்றி ஒரு குறிப்பு

கள ஆய்வு 2023 டிசம்பர் 16 அன்று மாலை துவங்கி டிசம்பர் 18 மதியம் வரை விடாது பெய்த மழையோடு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்ந்து 18ஆம் தேதி தூத்துக்குடியில் மாவட்டங் களில் பெரும் பாதிப்பைக் கொண்டு வந்தது. வரலாறு காணாத மழை. 17ந் தேதி காயல் பட்டினத் தில் 93 சென்டிமீட்டரும் திருச்செந்தூரில் 69 சென்டிமீட்டரும் ஸ்ரீவைகுண்டத்தில் 63 சென்டி மீட்டரும் அதிகபட்சம் மழை பெய்தது. கோரம்பள்ளம், மீள விட்டான் குளத்து நீர் சூழ்ந்து தூத்துக்குடி நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. தூத்துக்குடி நகரமெங்கும் மழை வெள்ளம்.

சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும்! இட ஒதுக்கீடு விரிவாக்கப்பட வேண்டும்!

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தவறி விட்டது மோடி அரசாங்கம். ஆனால், பீகார் அரசு முன்சென்று, மாநில மக்கள்தொகையின் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தடுப்பதற்காக பாஜக எடுத்த தீவிரமான முயற்சிகளையும் முறியடித்து பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அந்த கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்களின் ஒட்டுமொத்த சாரம்சத்தையும் காந்தியின் 154வது பிறந்த நாளன்று பொதுவெளியில் வெளியிட்டுவிட்டது.

இன்னொரு சாதியாதிக்கப் படுகொலை!

திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முத்தையா, நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் செய்தார் என்பதற்காக படு கொலை செய்யப்பட்டார். முதலில் வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தில் கொலை வழக்காக பதிவு செய்திருந்த காவல்துறை, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைந்துவிட்டு, அந்த மூன்று பேரில் முத்தையாவை யார் என்றே தெரியாத சுரேஷ் என்பவரின் தங்கையை முத்தையா கேலி செய்தார் என்பதற்காக இவர்கள் மூவரும் சேர்ந்து கொலை செய்தார்கள் என்று கூறி இப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கி விட்டு, வெறும் கொலை வழக்காக மாற்றியுள்ளது.

மணிப்பூரின் முடிவில்லா வன்முறைக்கும் மக்களின் சொல்லமுடியாத துயரத்திற்கும் பாஜக அரசாங்கங்களே பொறுப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பிரதிமா எங்கீபி (கர்பி ஆங்லாங் இககமாலெ தலைவர், மற்றும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக துணைத் தலைவர்), பிபேக் தாஸ் (இகக மாலெ அஸ்ஸாம் மாநிலச் செயலாளர்), சுசேதா தே (இகக மாலெ மத்தியக் குழு உறுப்பினர், டெல்லி), கிளிஃப்டன் டி ரோஜாரியோ (இகக மாலெ கர்நாடகா மாநிலச் செயலாளர்), அவனி சோக்சி (இகக மாலெ தலைவர், கர்நாடகா), மதுலிகா டி (அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம்) டு சரஸ்வதி (தலித் மற்றும் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர், கர்நாடகா) மற்றும் கிருஷ்ணவேணி (அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், தமிழ்நாடு) ஆகிய 8 பேர் கொண்ட குழு கடந்த ஆகஸ்டு 10 முதல் 14 வரை பல்

மாமன்னன்: சமூக நீதிக் கட்சிக்குள் நிலவும் சாதிய ஒடுக்குமுறை

சமூகத்தின் பல அடுக்குகளில் சாதிய ஒடுக்குமுறை பல பரிமாணங்கள் கொண்டுள்ளது. அதில் ஒன்று அரசியல் களம். தொடக்கத்தில் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதோருக்கும் இடையே இருந்த முரண்பாட்டில் உருக்கொண்ட திராவிட இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் இடைநிலை சாதிகளுக்கும் தலித் சாதிகளுக்கும் இடையே இருந்த முரண்பாடு முன்னுக்கு வந்தது. 1990களில் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த 'சாதிக் கலவரங்கள்', சமீபத்திய நிகழ்வான ஆணவக் கொலைகள் இதனை தெளிவாக வெளிக்காட்டுகின்றன.

சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் :

தமிழ்நாட்டு அரசியலில் காலூன்ற பாஜக தீவிரமான முயற்சி களை மேற்கொண்டு வருகிறது; மற்றொருபுறம், ஆர்எஸ்எஸ் பாரத (இந்துத்துவா) கலாச்சாரத்துடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை இணைக்க காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புனித யாத்திரைப் பயணங்களாக தமிழ்நாட்டு மக்களை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கும், குஜராத்திற்கும் அழைத்துச் செல்வதுடன், இந்துத்துவா கருத்தியலை புகுத்தும் கோயில் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் கட்டமைக்கப்படுகின்றன.

ராகுல் காந்தி பதவி பறிப்பு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

அரசியல் குற்றமயமாக்கல் என்பது இந்தியா வில் ஆழ்ந்த கவலை அளிக்கும் விசயமாக இருந்து வருகிறது. அது ஜனநாயகத்தில் நிறுவனங்களின் நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவிப்பதாகவுள்ளது. அப்படியிருக்கையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் சிலவகை குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவி பறிப்பை கட்டாயமாக்கியது. அவர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடுவதையும் அந்த சட்டம் தடுக்கிறது.

பழனியில் ஆபத்தான வெடிமருந்து தொழிற்சாலை விவசாயிகள் எதிர்ப்பு இயக்கம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வடக்கு தாதநாயக்கன் பட்டி கிராமத்தில், பழனி வடக்கு மலைத் தொடர் அடிவாரத்தில், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த அமராவாதி வனப்பகுதிக்கு அருகில், 250 ஏக்கர் பரப்பளவில், வருடத்திற்கு 2,191 டன் வெடி பொருட்களுக்கான மூலப்பொருட்களைத் தயாரிக்கும் சுவா எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆலையைத் துவக்க பல்வேறு அரசு முகாமைகள் அனுமதி அளித்துள்ளன. தனியார் கார்ப்பரேட் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதிக்கு மிக அருகில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் மலை, சமணர் குகைகள், வரலாற்றுச் சின்னங்கள், அகழ்வாய்வு தளங்களும் உள்ளன.

குடியரசு நாளில் என்எல்சிக்கு எதிராக கருப்புக் கொடி?!

1956ல் தொடங்கப்பட்டது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். தமிழ்நாட்டின் பெருமையாகவும் வளர்ச்சியாகவும் பேசப் பட்டது. ஆண்டுக்கு ரூ 11,900 கோடி லாப மீட்டு கிறது என்எல்சி. ஆட்சியாளர்கள், "நவரத்னா" நிறுவனம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் விரிவு படுத்தியுள்ளனர். இப்போது, நெய்வேலி நிறுவனத்தை இந்திய நிறுவனமாக மாற்றியும் விட்டனர். பல தனியார் முதலைகளின் கண்ணை உறுத்துகிறது என்எல்சி இந்தியா!