பாப்பாநாட்டில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்குநீதி வேண்டும்!

தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்குதமிழ்நாடு அரசு முடிவு கட்ட வேண்டும்

ஆகஸ்ட் 9, கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடே போராட்டக் களமாகிக் கொண்டிருக்க, ஆகஸ்ட் 12 அன்றுதஞ்சாவூர் மாவட்டம்பாப்பாநாட்டில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் புகாரை பதிவு செய்யாமலும் உடனடி நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியமாக நடந்துகொண்ட பாப்பாநாடு காவல்நிலையம்உதவி சார் ஆய்வாளர் சூர்யாவைக் கண்டித்து 19.08.2024 அன்று முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. காலைமுதல் பிற்பகல்வரை, 200 பெண்கள் உட்பட 700 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். திமுகஅதிமுகபாஜக தவிர்த்த அரசியல் கட்சியினர்பொதுமக்கள் நடத்திய  அந்தப் போராட்டத்தில்சிபிஐஎம்எல் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பிஅகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில அமைப்பாளர் ஆரேவதி, நீதிக்கான மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அ.சிம்சன், முனைவர் அரச.முருகுபாண்டியன்பேராசிரியர் கோச்சடை மக்கள் சிவில் உரிமைக் கழகம்மனித உரிமை கூட்டமைப்பு தலைவர் சுகுமாறன்சிபிஐஎம்எல் தஞ்சை மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் தவச்செல்வம்செந்தில் உள்ளிட்ட ஆய்வுக்குழுவினர் நேரில் கலந்து கொண்டு ஆதரவளித்தனர்மக்கள் போராட்டத்தின் விளைவாக, பொறுப்பற்று நடந்து கொண்ட உதவி ஆய்வாளர் சூர்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தி பிற்பகல்மணிக்கு  வந்ததுஆய்வுக்குழுவினர் தொடர்ந்துபாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை, உறவினர்களை பக்கத்து வீட்டுக்காரர்களைபொதுமக்களை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர்அதனடிப்படையில் ஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கை.

தஞ்சை மாவட்டம்ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு கிராமத்தில் கடந்த 12.08.2024 அன்று வங்கியிலிருந்து வீடு திரும்பிய 23 வயது இளம் பெண்ணைபேர் கொண்ட கும்பல் வழிமறித்து, மக்கள் வசிக்கக் கூடிய குடியிருப்புப் பகுதி கொட்டகைக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதுவன்கொடுமையை எதிர்த்துப் போராடிய அப்பெண்ணை அடித்து உதைத்துபீர் பாட்டிலால் தலைகழுத்தில் தாக்கி,  4 பேர் அவரை வன்புணர்வு செய்துள்ளனர்அதற்கு  2 பேர் காவல் இருந்துள்ளனர்.

அன்றுமாலை 4.20 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண் அவரது தந்தைஉறவினர்களுடன் பாப்பாநாடு காவல்நிலையம் சென்று, பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யாவிடம் நடந்த கொடுமையைக் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்இது குறித்து உதவி ஆய்வாளர் சூர்யா விதிகளுக்குப் புறம்பாக, இரு ஆண் காவலர்கள் முன்னிலையிலேயே அப்பெண்ணிடம் விசாரித்துள்ளார். மேலும்வழக்குப் பதிவு செய்யாமல்ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்குப் போகச் சொல்லியுள்ளார்பாதிக்கப்பட்ட பெண் தனக்கு உடல்நிலை சரியில்லைபுகார் எழுத முடியவில்லை என்று கூறிய பின்னரும் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யாமல் தனது கடமையிலிருந்து தவறியுள்ளார்.பின்னர் பாதிப்புக்குள்ளான பெண்அவரது தந்தை உறவினர்களோடு பட்டுக்கோட்டை அரசு பொதுமருத்துவமனைக்குச் சென்றுமருத்துவர்செவிலியர்களிடம் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுள்ளார்உடனடியாக சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர், காவல்நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு வருமாறு திருப்பி அனுப்பியுள்ளனர். அதனால் இரவுமணியளவில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று  புகார் அளித்துள்ளார்அங்குப் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரி தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறியுள்ளார்.பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்பட்ட அப்பெண்அவரது தந்தைஉறவினர்களுடன் 13.08.2024 அதிகாலைமணியளவில் தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இதற்குப்பிறகே, ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையம்இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று, 13.08.2024 காலைமணிக்கு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளனர். (Cr.No.13/2024 u/s 127(2), 118(1), 70(1), 351(3), 308(5), 61(2) Bharatiya Nyaya Sanhita (BNS), 2023). இதன்பின்னர், ஒரத்தநாடு நீதித்துறை நடுவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரடியாக வாக்குமூலம் பெற்றுப் பதிவு செய்துள்ளார்.

 இச்சம்பவத்தில் தொடர்புடையபேர் மீதும் வழக்குப் பதிவு செய்யாமல் 1) கவி () கவிதாசன், 2) திவாகர், 3) பிரவீன், 4) ஒரு சிறுவன் ஆகியபேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துசிறையில் அடைத்துள்ளனர்பாதிக்கப்பட்ட பெண் எழுத்துபூர்வமான புகாரிலும், ஒரத்தநாடு நீதித்துறை நடுவரிடமும் அளித்த வாக்குமூலத்திலும் கூறியுள்ள வேல்முருகன் மற்றும் மற்றொரு சிறுவன் மீது முதலில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லைபோராட்டத்தின் காரணமாகதப்பிக்க விடப்பட்ட வேல்முருகனும்மற்றொரு சிறுவனும் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் முதல்கட்ட சிகிச்சைக்குப் பின்பாதுகாப்பான வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் தாக்கியதால் தலைமுதுகுப் பகுதிகளில் ஏற்பட்ட காயங்களுக்கு உயர் சிகிச்சையும்உளவியல் ரீதியான சிகிச்சையும் அவருக்குத் தேவைப்படுகிறது.

குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் 1/2 பவுன் தோடு, 1 கிராம் பவுன் வளையம்செல்போன்ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைபான் அட்டை ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனர். தங்கநகைகளை பட்டுக்கோட்டையில் விற்றுள்ளனர்.

பாப்பாநாடு காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சூர்யா சட்டப்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர்களைச் சட்ட நடவடிக்கையில் இருந்து காப்பாற்றும் நோக்கத்திலும் செயல்பட்டுள்ளார்ஒரத்தநாடு காவல்நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர்பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் கடமையில் இருந்து தவறியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக்கேட்டு ஒரத்தநாடு நீதித்துறை நடுவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாப்பாநாடு பகுதிகளில் காவல்துறை ஆதரவோடு கஞ்சா விற்பனை பல காலமாக நடந்து வருகிறது. பாலியல் வன்கொடுமை நடந்த கீற்றுக் கொட்டகை கஞ்சா விற்பனை செய்யும் இடமாக இருந்துள்ளது. பொதுமக்கள் இது குறித்து புகாரளித்துள்ளனர்காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் குற்றத்தை தடுத்திருக்க முடியும்.      

ஆய்வுக்குழுதமிழக அரசுக்கும்மாவட்ட நிர்வாகத்திற்கும்வலியுறுத்தும் கோரிக்கைகள்:      

1) இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கை உடனடியாக சிபிசிஐடி புலன்விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

 2) பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்து வழக்குப் பதிவு செய்யாததோடுமருத்துவமனைக்கு அனுப்பிமருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் தரத் தவறிய பாப்பாநாடு காவல்நிலைய பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா மீதும்சிகிச்சை அளிக்க மறுத்ததோடுமருத்துவப் பரிசோதனையை உரிய நேரத்தில் செய்யாமல் வழக்கின் முக்கிய ஆதாரங்கள் அழியக் காரணமான பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3) பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்செவிலியர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

4) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு செலவில் உயர் மருத்துவ சிகிச்சையும்உளவியல் சிகிச்சையும் உடனே அளிக்க வேண்டும்அவருக்கு இடைக்கால இழப்பீடாகலட்சமும், அவரது கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணியும் வழங்க வேண்டும்.

5) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும்அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

6) பாப்பாநாடு பகுதிகளில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) கிருஷ்ணகிரி, பர்கூரில் போலி என்சிசி முகாமில் பல பெண் சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். தொடரும் இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொள்ளாச்சி உள்ளிட்ட வன்கொடுமை நிகழ்வுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.