புல்டோசர் ஆட்சிக்கெதிரான ஒரு மாத பரப்புரை இயக்கத்தில் இணைந்திடுவோம்!!

 

ஏழைகளின் இல்லங்களையும் வாழ்வாதாரத்தையும் தகர்த்து தரைமட்டமாக்குவதை நிறுத்து!
இந்தியாவின் சகோதரத்துவத்தை தகர்த்து தரைமட்டமாக்குவதை நிறுத்து!!
இந்திய அரசமைப்பு சட்டத்தை தகர்த்து தரைமட்டமாக்குவதை நிறுத்து!!!

 

நாடுமுழுவதும், ஏழைகளின் இல்லங்களும் வாழ்வாதாரமும் (சேரிகள், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள், தெருக்கடைகள், வண்டிகள் இன்ன பிற) தகர்த்தெறியப் பட்டு வருகின்றன. பாஜக அரசாங்கங்களும் நகர்ப்புர மாநகராட்சிகளும் குறிப்பாக ஏழை இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி, அவர்களது இல்லங்களையும் மசூதிகளையும் கடைகளையும் தகர்த்து தரைமட்டமாக்க புல்டோசர்களை அனுப்பி வருகின்றன. இந்த செயல்கள், " ஆக்கிரமிப்பை அகற்றுவது", "கலவரக்காரர்களை தண்டிப்பது", "பங்களாதேசிகள் ரொகிங்கியர்களை வெளியேற்றுவது" என்ற பேரால் செய்யப்பட்டு வருகின்றன. பாஜக, புல்டோசரை தனக்கான புதிய சின்னமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது: இந்தச் சின்னம், கொடூரமான ஏழைகள் விரோத, இஸ்லாமிய விரோத நோக்கத்தை காட்டுகிற சின்னமாகும். இந்தியா முழுவதுமுள்ள ஏழைகளும் உழைக்கும் வர்க்கத்தினரும் இந்த புல்டோசர் ஆட்சியை தடுத்து நிறுத்தியாக வேண்டும். இந்து, இஸ்லாமியர், சீக்கியர் அல்லது கிறித்துவர் எவராயினும் நாம் ஒரே குரலில் சொல்லியாக வேண்டும்: ஏழைகளின் வாழிடம், வாழ்வாதாரத்தின் மீது, இந்தியாவின் நல்லிணக்கம், சகோதரத்துவத்தின் மீது, இந்திய அரசமைப்பு சட்டத்தின்மீது பாஜக புல்டோசரை ஓட்டுவதை நிறுத்து!

மே1, மே நாள் தொடங்கி, புல்டோசர் ஆட்சியை தடுத்து நிறுத்திட மக்களை உத்வேகப்படுத்துகிற வகையில், ஒரு மாதகால பரப்புரை இயக்கத்தை இகக(மாலெ) நடத்த உள்ளது.

 

இகக(மா-லெ)

மத்தியக் கமிட்டி