பெங்களூரூ நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திக்காயித் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்புறம் 2.6.2022 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தோழர். செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்பாட்டுக் குழு உறுப்பினர் சந்திரமோகன், சேலம் மாவட்ட எஸ்கேஎம் ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் நடராஜன், சங்கரய்யா, தங்கவேலு உட்பட தோழர்கள் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கைக்காக நாகர்கோவிலில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் சுசீலா, மாநகரச் செயலாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.