2024 தேர்தல்கள்: மோடியின் திட்டமும் மக்களின் திட்டங்களும்

மோடி 2.0வின் இறுதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பிப்ரவரி 10 அன்று முடிவுக்கு வந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு தன்னைத் தானே பாராட்டிக் கொண்ட தீர்மானத்தை இந்த அரசாட்சி நிறைவேற்றியது. உத்தரபிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசாங்கமும் கோவிலை கட்டியதற்கு மோடி, யோகி இருவரையும் பாராட்டி இதே போன்றதொரு தீர்மானத்தை பிப்ரவரி 5 அன்று உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றி உள்ளது. யோகி ஆதித்யநாத் அயோத்திக்கான பெருமைக்கு உரிமை கொண்டாடு வதோடு நிச்சயமாக நின்றுவிடப் போவதில்லை.

அனைவருக்கும் வாக்குரிமை சட்டகத்தைப் பாதுகாப்போம்

இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட 74வது ஆண்டு விழா 25 ஜனவரி 2024 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாள் தேசிய வாக்காளர் நாளாக தற்போது கொண்டாடப்படுகிறது. இந்தியா போன்ற ஒரு பரந்த, பன்முகம் கொண்ட ஒரு நாட்டில், தேர்தல் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்ட ஒரு அரசிய லமைப்புச் சட்ட நிறுவனம் என்ற முறையில், அதன் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. தேர்தல் முறையின் மீதான மதிப்பு என்பது தேர்தல் ஆணையத்தின் மீதான மதிப்பைச் சார்ந்தது. ஆனால், இந்த விசயத்தில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றது.

பெண்களுக்கு எதிரான அனைத்து மகளிர் காவல்நிலையங்கள்

1992ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முதல் அனைத்து மகளிர் காவல்நிலையம் துவங்கப் பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, வரலாற்றில் இல்லாத முன்மாதிரி என்று வர்ணித்தார். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை ஆண் காவலர் களிடம் வெளிப்படுத்துவதில், காவல்நிலையத்தை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளைக் களைவதற் காகத்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். பெண் களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காகவும் திருமண உறவுப் பிரச்சனைகளை விசாரிப்பதற் காகவும் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டதென்று 2013-2014 சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

2023இன் இறுதிச்சுற்றுத் தேர்தல்களில் இருந்து கிடைக்கும் பாடங்கள்

நவம்பரில் நடைபெற்ற அய்ந்து சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் கிட்டத்தட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் கள அறிக்கைகளும் தவறென நிரூபித்துள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று கணித்த வாக்குப்பதிவிற்குப் பிந்தைய சில கணிப்புகளும் கூட, அருகிலுள்ள சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு எளிதான பெரும்பான்மை கிடைக்கும் என்றன.

தோழர் வினோத் மிஸ்ரா, சற்றும் சளைக்காத மக்கள் ஜனநாயகப் போராளி!

இவ்வாண்டு தோழர் வினோத் மிஸ்ரா மறைந்த 25வது ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கிறோம். நக்சல்பாரிக்குப் பிந்தைய கட்டத் தில், சிபிஐஎம்எல் கட்சியை மறுசீரமைத்திட, விரிவாக்கிட, பலப் படுத்திட அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை நாம் நினைவுகூருகிறபோது, என்றென்றும் உத்வேகமூட்டும் அவரது புரட்சிகர மரபுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறபோது, இந்திய அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்தின் மீதான பாசிசத் தாக்குதலை முறியடிக்க வேண்டிய மைய சவாலின் பின்னணியில், அவரது உள்ளார்ந்த, மையமான கருத்துக்களையும் பங்களிப்புகளையும் குறித்த ஒரு மறுபார்வை என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

2023ல் மோகன் பகவத்தின் விஜயதசமி உரை -

ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்கான சங்கிப் பெருந்தலைவரின் உரையுடன், ஆர்எஸ்எஸ் அந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளாக விஜயதசமியை அனுசரிக்கிறது. மோடி அரசாங்கம் அமைந்த 2014-லிருந்து இந்தியாவில் ஆர்எஸ்எஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தையும் அதிகாரத் தையும் நிச்சயமாகவே பெற்றுள்ளது. மேலும் மோகன் பகவத்தின் விஜயதசமி உரையானது படிப்படியாக வெளிப்படுகிற சங்- பாஜக திட்டங்களின் மீது வெளிச்சத்தை பாய்ச்சுகிற முக்கிய உரைப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

தன் பாலின இணையர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பால் புதுமையர் என்றழைக்கப்படும் எல்ஜிபிடிக்யூஐயினரின் உரிமைக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக பால் புதுமையர் சமூகத்தைச் சேர்ந்த 15 இணையர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கில் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

செப்டம்பர் அழைப்பு:

நாட்டில், ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மேலும் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.அரசமைப்புச் சட்டமும் நாடாளுமன்ற ஆட்சிமுறையும் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் நாட்டின் முதல் முன்னுரிமையான போராட்ட மாகும். அடித்தள மக்கள் தொடங்கி அனைத்துப் பகுதி மக்களின் முதன்மைப் போராட்டமாகும். தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டம் ஊக்கம் பெற்று வருகிறது. நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு சற்றும் குறையாத இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் முன்களப் பணியாளர்களாக களமாடி வருகிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் சதியை முறியடித்தேயாக வேண்டும்

இந்து மேலாதிக்கவாத முகாமின் நீண்டகாலத் திட்டமான இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்கான உரத்த கூச்சல் இப்போது வெளிப்படையாக கேட்கிறது. இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான வாதம் மிகவும் துணிச்சலாக பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய் ஒரு செய்தித்தாளில் எழுதிய கட்டுரையின் வடிவத்தில் வெளிவந்துள்ளது.

ஜனநாயக இந்தியா, சட்டப்பூர்வமாக்கப்பட்ட சர்வாதிகாரத்தை சகித்துக் கொண்டிருக்காது

 சுதந்திரத்தின் 76 வது ஆண்டு விழாவை இந்தியா கொண்டாடும் போது, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலிருந்து ஆற்றிய தனது பத்தாவது சுதந்திர தின உரையை தேர்தலுக்கான மற்றுமொரு கடும் முயற்சிக்கான உரையாக மாற்றினார். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிரான அவரது சோர்வுமிகுந்த வாய்ச்சவடால், அதிகரித்து வரும் மக்களின் கோபத்தையும், அவரது பாசிச ஆட்சிக்கு எதிராக எழுந்து வரும் அரசியல் ஒற்றுமையின் அறிகுறிகளையும் பற்றி அவருக்கு வளர்ந்து வரும் பயத்தையே வெளிப்படுத்தியது.