ஆளுநர் உரைக்கு எதிராக ஆளுநர்.

தேசிய கீதத்துக்கு ஆளுநர் அவமரியாதை

பிப் 12 அன்று ஆளுநர் உரையோடு ஆரம்பிக்க வேண்டிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஆளுநர் வெளிநடப்போடு துவங்கியது. தேசிய கீதத்துடன் உரையை முடிப்பதற்குக் கூட அவர் காத்திருக்கவில்லை. சட்டப் பேரவைத் தலைவரால் அவமதிக்கப்பட்டதாக காரணம் கூறி, தேசிய கீதத்துக்காக எழுந்து நின்ற ஆளுநர், அது பாடப் படும் வரை காத்திராமல் வெளியேறி, தேசிய கீதத்தையே அவமதித்து விட்டார்.

ஆளுநர் கோட்சேவுக்கு எதிரானவரா?

அயோத்தி ராமனைத் தூக்கி வந்த அரசியல் ராமன் !

ஜனவரி 2ல் திருச்சி வந்து சென்ற பிரதமர் மோடி மீண்டும் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்து சென்றார். அமைச்சர் உதயநிதியின் அழைப்பை ஏற்று ஜனவரி 19 அன்று சென்னை வந்த மோடி, விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) கோலாகல நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தபின்னர், தமிழ்நாட்டில் 3 நாட்கள் தங்கிவிட்டார். ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவர், திருவரங்கம், ராமநாதபுரம், ராமேசுவரம், ராமர்பாதம், அரிச்சல்முனை என பல இடங்களுக்குச் சென்று தில்லி வழியாக 22ந் தேதி அயோத்திக்கு சென்றார்.

அயோத்தி: ராமரின் பெயரிலான கோவில் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான மோடியின் நினைவுச் சின்னமாக மாறியது

முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி கிடைத்தது. வரலாற்று சிறப்பு வாய்ந்த பாபர் மசூதி சங்கிப் படையினரால் பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வன்முறை மிக்க இந்தச் செயலும் அதன் விளைவாக நூற்றுக் கணக்கான உயிர்கள் பலியான பின்பும் பல இந்தியர் களும் இதனை மசூதிக்கு எதிராக கோயில் பிரச்சினை என்ற கோணத்திலேயே தொடர்ந்து காண்கின்றனர். அண்மைக்காலம் வரை மசூதி இடிப்பை ஒரு குற்ற நடவடிக்கையாகவே உச்ச நீதிமன்றம் கூறியது. சட்டத்தின் ஆட்சியை அருவருக்கத்தக்க வகையில் மீறிய செயலாகும் எனவும் கூறியது.

மோடியின் தமிழ்நாடு வருகை!

"திரும்பிப்போ மோடி" ட்விட்டர் இயக்கத்தால் மோடியை, பாஜகவை பீதியடையச் செய்த தமிழ்நாடு, "வருக மோடி, வணக்கம் மோடி" என்று ட்விட்டர் இயக்கம் நடத்தி திருச்சி வந்த மோடியை வரவேற்றுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடு மகிழ்ச்சி தெரிவிக்கிறது. "வணக்கம் மோடி" ஹாஷ்டேக் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுட்டுரை களைப் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டி பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழ்நாடு மக்களை பாராட்டி மகிழ்ந்துள்ளதையும் அந்த ஏடு செய்தியாக்கி உள்ளது.

ஜெர்மன் நாஜிசமும் சங் பரிவார பாசிசமும்

பல்வேறு நாடுகளிலுமுள்ள பாசிசங்கள் அனைத்தும் ஜெர்மானிய நாஜிசத்தைத் தம் முன்மாதியாகக் கொண்டிருந்தாலும் அதன் முழு அச்சு வார்ப்பாக இந்திய பாசிசம் மட்டுமே இருப்பதாகக் கருதலாம்.

அவற்றின் ஒத்த தன்மைகளை இங்கு பார்ப்போம்:

சிபிஐ எம்எல் கட்சி அறைகூவல்!

இந்த நாடே வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. "இந்து ராஷ்ட்ரா" உருவாக்கும் கனவுகளில் சங்கி பரிவாரங்கள் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் புகைப்புட்டிகள்

டிசம்பர் 13, 2001 அன்று இந்திய நாடாளு மன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்கு தலின் இருபத்திரண்டாவது நினைவு நாளில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிர்ச்சி தரும் புகை பீதிக்கு சாட்சியமாகியது. சாகர் சர்மா என அடையாளம் காணப்பட்ட லக்னோ இளைஞர் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து திடீரென குதித்து, மேஜைகள் மீது தாவிச்சென்று மஞ்சள் புகையை வெளியேற்றும் புட்டியைத் திறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைக்கும் முன்பு, ஜீரோ நேரம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இதனைத் செய்தார். சாகருடன் மைசூரின் மனோரஞ்சன் என்ற கூட்டாளியும் இருந்தார்.

ஈபி, ஈடியின் அரசாட்சியும் இந்திய தேர்தல் ஜனநாயகத்தை மேலும் மேலும் கேலிக்கூத்தாக்குவதும்

மோடி அரசாங்கத்திற்கு ஈபியும் (தேர்தல் பத்திரங்கள்), ஈடியும் (அமலாக்க இயக்குனரகம்) அதிகாரத்திற்கான இரண்டு மிகப்பெரிய ஊற்றாக வெளிப்பட்டுள்ளன. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களில் உண்மையிலேயே ஈடிதான் பாஜகவிற்கான நட்சத்திர பரப்புரையாளராக மாறியுள்ளது. ஈடியின் இருத்தல் நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் என்ன செய்திருக்கிறதென்றால் தனது எதிர்ப்பாளர்களை இலக்காக்க அதனை ஆயுதமாக்கி யிருக்கிறது. கார்ப்பரேட்டு களிடமிருந்து கட்டுப் பாடற்ற, கணக்கில் வராத நிதி பெறுதலை எளிதாக்க, தேர்தல் பத்திரங்களை மோடி அரசாங்கம் தான் உருவாக்கியது; அறிமுகப்படுத்தியது.

ஐந்தாவது பெரிய பொருளாதாரம், உலகப் பசிக் குறியீட்டில் 125 நாடுகளின் பட்டியலில் 111 வது இடத்திலுள்ளது

இஸ்ரேலின் இடைவிடாத குண்டு வீச்சாலும் அத்தியாவசியப் பொருட்களின் கொடூரத் தடையாலும் நிகழ்த்தப்படும் ஒரு இன அழிப்பு தொடர் தாக்குதலை, காஸாவின் கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகள் எதிர் கொள்கிற போது, உலக பசிக் குறியீடு 2023 உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பசியின் வேதனை நோக்கி, நமது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆழமாக உட்பொதிந்துள்ள சமூகபொருளாதார காரணிகள், துரிதமாக மோசமாகி காலநிலை நெருக்கடி ஆகியவற்றோடு கோவிட் வரும் பெருந்தொற்று, ரஷ்ய உக்ரைன் போர் போன்ற சமீபத்திய நிகழ்வுப் போக்குகளின் சேர்க்கையே அச்சுறுத்தும் உலக பசி காட்சிகளுக்கு காரணம் என உபகு 2023 நம்புகிறது.

அதிகாரத்தின் முன், நேருக்கு நேராக உண்மையைப் பேசுவது இதழியல் நெறிதானே தவிர பயங்கரவாதம் அல்ல!

அக்டோபர் 3, விடிகாலையில் நியூஸ் கிளிக் இணையதள ஏட்டோடு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இதழியலாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் (ரெய்டுகள்) இந்தியாவிலுள்ள விமர்சனபூர்வமான ஊடகக் குரல்களின் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும். டெல்லியின் பல இடங்களில் நடந்த சோதனைக ளுக்கு முன்னால், தெலுங்கானாவின் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதும், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் அதே போல சோதனைகள் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) நடத்தப்பட்டிருக்கிறது.