பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தவறி விட்டது மோடி அரசாங்கம். ஆனால், பீகார் அரசு முன்சென்று, மாநில மக்கள்தொகையின் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தடுப்பதற்காக பாஜக எடுத்த தீவிரமான முயற்சிகளையும் முறியடித்து பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அந்த கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்களின் ஒட்டுமொத்த சாரம்சத்தையும் காந்தியின் 154வது பிறந்த நாளன்று பொதுவெளியில் வெளியிட்டுவிட்டது.