தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ளம் பற்றி ஒரு குறிப்பு

கள ஆய்வு 2023 டிசம்பர் 16 அன்று மாலை துவங்கி டிசம்பர் 18 மதியம் வரை விடாது பெய்த மழையோடு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்ந்து 18ஆம் தேதி தூத்துக்குடியில் மாவட்டங் களில் பெரும் பாதிப்பைக் கொண்டு வந்தது. வரலாறு காணாத மழை. 17ந் தேதி காயல் பட்டினத் தில் 93 சென்டிமீட்டரும் திருச்செந்தூரில் 69 சென்டிமீட்டரும் ஸ்ரீவைகுண்டத்தில் 63 சென்டி மீட்டரும் அதிகபட்சம் மழை பெய்தது. கோரம்பள்ளம், மீள விட்டான் குளத்து நீர் சூழ்ந்து தூத்துக்குடி நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. தூத்துக்குடி நகரமெங்கும் மழை வெள்ளம்.

சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும்! இட ஒதுக்கீடு விரிவாக்கப்பட வேண்டும்!

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தவறி விட்டது மோடி அரசாங்கம். ஆனால், பீகார் அரசு முன்சென்று, மாநில மக்கள்தொகையின் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தடுப்பதற்காக பாஜக எடுத்த தீவிரமான முயற்சிகளையும் முறியடித்து பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அந்த கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்களின் ஒட்டுமொத்த சாரம்சத்தையும் காந்தியின் 154வது பிறந்த நாளன்று பொதுவெளியில் வெளியிட்டுவிட்டது.