ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட நூறு சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கும்போது, தலைநகர் சென்னை ஆசிரியர்கள், செவிலியர்களின் போராட்டக் களமாகக் காட்சியளிக்கிறது. நவதாரளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் எந்த அரசும் தொழிலாளர்கள், ஊழியர்கள், விவசாயிகளின் போராட்டத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். நன்கு கட்டமைக்கப் பட்டத் தொழிற்சங்கங்களை கொண்டிருக்கிற ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டக் களத்துக்கு மீண்டும் மீண்டும் வருகின்றனர்.

இந்தியாவைக் காக்க ஜனநாயகத்தை காப்பாற்றியாக வேண்டும்

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டின் தலைமைக் குழு தோழர்களுக்கும் மற்றுமுள்ள தலைவர் களுக்கும் மாநாட்டு பிரதிநிதிகளுக்கும் அனைத் திந்திய விவசாய, கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் வணக்கத்தையும் வாழ்த்து களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வழக்கறிஞர்களின் உரிமையை முடக்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை வழக்கறிஞர்கள் முகம்மது யூசுப் மற்றும் முகம்மது அப்பாஸ் இருவரும் தேசிய புலனாய்வு முகமை(NIA)யால் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத் தில் ஆஜரானார்கள் என்பதற்காக அவர்களையும் குற்றவாளிகள் ஆக்கி கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை. இது வழக்கறிஞர்களின் உரிமையை மட்டுமின்றி வழக்கறிஞர்கள் தொழிலையே முடக்கும் செயல் ஆகும். யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்களும் அச்சட்டத்தின் படி குற்றவாளிகள் என்கிற சரத்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மிகவும் மோசமான சரத்தாகும்.

ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் பஹல்வான்!

நமது மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதியை உறுதி செய்வதற்காக நமது முழு நாட்டையும் ஜந்தர் மந்தராக மாற்றுவதற்கான நேரம் இது !

மதுச்சேரியை மக்கள் புதுச்சேரியாக மாற்றப் போராடுவோம்!

பாஜகவின் பாசிச ஆட்சியில் மாநில ஆளுநர்கள் தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுகளை செயல்பட விடாமல் தொடர் சர்ச்சைகள் ஏற்படுத்துவது அதிகரித்து வரும் சூழலில், பல போராட்டங்களுக்குப் பின்னால், தற்போது தமிழ்நாட்டிலும் தெலுங்கானாவிலும் ஆளுநர்களால் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை உள்ளிட்ட கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாசிச, இன வெறுப்பு அரசியலை முறியடித்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!


மனித வாழ்க்கையில் புலம் பெயர்வு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் துவங்கி, மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம், கண்டம் விட்டு கண்டம் என அது விரிவடைந்து செல்லும் இயக்கப் போக்காக நிலை பெற்றிருக்கிறது. தேச எல்லைகளைக் கடக்கும் போது அது கட்டுப்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாகி விடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நாட்டிற்குள் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்ல, பணிபுரிய, தொழில் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. சில வடகிழக்கு மாநிலங்கள் வேலைக்கு வருபவர்களை ஒழுங்குபடுத்த உள் நுழைவுச் சீட்டு முறையை கொண்டுள்ளன.

நீதிக்கான போராட்டத்தில், ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஒன்று சேருவோம். அதுதான் தோழர் சந்திரபோசுக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலி

அனைவருக்கும் வணக்கம்!

தோழர் சந்திரபோஸ் நினைவஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள கட்சி சிவகங்கை மாவட்டத் தலைமைக் குழுவுக்கு பாராட்டுகள்.

தோழர் செந்தமிழ், இது கந்தக பூமி என்று சொன்னார். இந்த பூமியை எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்படி வேண்டுமானாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்போது வேண்டுமானாலும் தீப்பிடித்துக் கொள்ளும் என்று சொன்னாரா? தெரியவில்லை. அவர்தான் சொல்ல வேண்டும்.

தோள் சீலைப் போராட்டம் 200 ஆண்டுகள்: போராட்டம் தொடர்கிறது!

தோள் சீலைப் போராட்டம், மானுட மாண்பை, பெண்களது தன் மானத்தை மீட்டுக் கொள்வதற்கான உரிமைப் போராட்டம். சமுதாயத்தின் சரிபாதி பெண்களது இந்தப் போராட்டம் மொத்த சமுதாயத்தின் போராட்டமாகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, பற்றிப் படர்ந்த உக்கிர மிகுந்த இந்தப் போராட்டம், ஆகச்சிறந்த பண்பாட்டு, அரசியல், பொருளாதாரப் போராட்டமாகும்.

கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏஐசிசிடியு

கன்னியாகுமரி மாவட்டத்தின் ரப்பர் தோட்டங்களின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு முந்தையது. ஜான், ஜோசப் மர்பி என்ற ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 1902 ஆம் ஆண்டு அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்த கேரளாவின் கோட்டய மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்ளை அறிமுகப்படுத்தி பயிரிட்டனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிர்கள் பயிரிடப்பட்டன. இத்தோட்டத்தில் சுமார் லட்சம் பேர் தொழிலாளர்களாகப்  பணியில் சேர்ந்தனர். இவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.

விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு மேம்பட்ட பணி நிலைமைகள் வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் தொடரும்.

தமிழ்நாட்டில் விசைத்தறி முக்கிய வேலை அளிக்கும் தொழிலாக உள்ளது. குறிப்பாக நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரியும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. தமிழ்நாட்டிற்கு செலவானியையும் வேலைவாய்ப்பையும் உரு வாக்கித் தருவதால் தமிழக அரசு விசைத்தறி உற்பத்திக்கு மட்டுமே என சில துணி ரகங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் பாரம்பரிய தொழிலான கைத்தறி உற்பத்திக்கு என்று சில ரக துணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்தொழிலை பாதுகாப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழக அரசு விசைத்தறிக் கூடங்களுக்கென இலவசமாக மின்சாரமும் வழங்குகிறது.