மோடி உத்தரவாதம் - உலக மகா வாய்ச் சவடால்

என்ன செய்தார் மோடி?

 

 

      வாய்ச் சவடால் உத்தரவாதம்  

 

உண்மை

 

இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுகிறது மோடி அரசு.

பெண்கள் மீது பிஜேபி தொடுக்கும் போர்

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிக்கும் 20 வயது மாணவியை மூன்று பேர் சேர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கூட்டுப் பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்கிற செய்தி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், 2023ம் ஆண்டின் கடைசி நாளில்தான் வெளியே தெரிந்தது. இறுதியாக அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் பிஜேபி ஐடி செல்லைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பிஜேபி வாரணாசி ஐடி செல்லின் அமைப்பாளர். மற்றொருவர் துணை அமைப்பாளர்.

மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் நீக்கம், எதிர்ப்புக் குரல்களை மவுனமாக்கும் மோடி அரசாட்சியின் வெட்கக்கேடான செயலாகும்

வெள்ளிக்கிழமையன்று மக்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை நீக்கியிருப்பதன் மூலம் அதானியுடைய மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியை அல்லது கார்ப்பரேட் போட்டிகளாலும் நேர்மையற்ற அரசியல் வழிமுறைகளாலும் உந்தப்படும் மோடி அதானி கூட்டை கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் சட்டப்பூர்வமற்றதாக்க மோடிஷா அரசாட்சி எந்தவொரு எல்லைக்கும் செல்லும் என தெளிவாக்குகிறது.